இந்தியா
10-ஆம் வகுப்பு மாணவனுடன் உல்லாசமாக இருந்த கணவனை பிரிந்த ஆசிரியை!
கேரளாவில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் 40 வயதான கணவனை பிரிந்த ஆசிரியையுக்கும் இடையே தகாத உறவு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் ஆழப்புழா அருகே உள்ள சேர்த்தலா முகம்மா என்ற பகுதியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 40 வயதான டியோரனா தம்பி என்ற பெண் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். கணவரை பிரிந்து வாழும் இவருக்கும் அதே பள்ளியில் 10-ஆம் படிக்கும் மாணவன் ஒருவனுக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது.
இந்த உறவு நாளுக்கு நாள் அதிகமாகி மாணவனை தனது வீட்டிற்கே அழைத்து சென்று ஆசிரியை உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த விஷயம் மாணவனின் வீட்டிற்கு தெரியவர அவர்கள் ஆசிரியயை கடுமையாக திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த ஆசிரியை சில நாட்கள் பள்ளிக்கு வராமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி ஆசிரியை மாணவனை அழைத்துக்கொண்டு சென்னைக்கு ஓட்டம்பிடித்துள்ளார். இதனையடுத்து மாணவனை காணவில்லை என பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி போலீசார் ஆசிரியை சென்னை சூளைமேட்டில் இருப்பதாக செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து சென்னை வந்த கேரள போலீசார் சூளைமேடு போலீசாரின் உதவியுடன் விடுதி ஒன்றில் இருந்த ஆசிரியையும், மாணவனையும் கையும் களவுமாக பிடித்தனர். இருவரும் தாய்-மகன் என கூறி அறை எடுத்து நான்கு நாட்களாக விடுதியில் தங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.