Connect with us

கிரிக்கெட்

கொரோனா தடுப்பு நிதியாக ரூ.7.5 கோடி நிதியுதவி செய்த ஐபிஎல் அணி!

Published

on

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டி இருக்கும் நிலையில் கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை அடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தொழிலதிபர்கள், திரையுலகினர், மற்றும் விளையாட்டு வீரர்கள் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். ஏற்கனவே பேட் கம்மின்ஸ் மற்றும் பிரட்லீ ஆகிய இருவரும் தங்களது சார்பில் கொரோனா தடுப்பு நிதியாக ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கினார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை கொரோனா தடுப்பு நிதியாக மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது. இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 7.5 கோடி என்பது குறிப்பிடதக்கது.

இன்று ராஜஸ்தான் அணி மும்பை அணியுடன் மோத இருக்கும் நிலையில் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் இந்த நிதியுதவி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ராஜஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் இதே போல் மற்ற ஐபிஎல் அணிகளும் தாராளமாக கொரோனா தடுப்பு நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?