Connect with us

இந்தியா

பி.எம்.கேர்ஸ் நிதிக்கு என்னதான்பா ஆச்சு..?- மத்திய அரசை விடாமல் குடையும் ராகுல் காந்தி

Published

on

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. பல மாநிலங்களிலும் கொரோனா தொற்று, பன் மடங்கு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதனால் அங்கு சில நாட்களுக்கு முன்னர் லாக்டவுன் உத்தரவுப் பிறப்பித்து உத்தரவிட்டது முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசு. இந்நிலையில் கொரோனா பரவலின் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் வார இறுதி லாக்டவுன் உத்தரவை அமல் செய்ய உள்ளது டெல்லி. 

இதையடுத்து, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக மத்திய அரசு ஏப்ரல் 11 முதல் 14-ம் தேதி வரை திகா உத்சவ் எனும் தடுப்பூசி திருவிழாவை நடத்தியது.

ஆனால், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமலும், தேவையான வசதிகள் இல்லாமலும் பல்வேறு மாநிலங்கள் திணறுகின்றன. படுக்கை வசதிகள், வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன், தடுப்பூசி இல்லாமல் பல மாநிலங்கள் தடுமாறி வருகின்றன. மத்திய அரசின் தொகுப்பில் இருக்கும் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் எனப் பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கையாண்டு வரும் நடவடிக்கைகள் குறித்துக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி பதிவிட்ட கருத்தில், “கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் படுக்கை வசதியும் இல்லை, பரிசோதனையும் இல்லை. வென்டிலேட்டரும் இல்லை, ஆக்ஸிஜனும் இல்லை. தடுப்பூசியும் பற்றாக்குறையாக இருக்கிறது. ஆனால், போலித்தனமாக தடுப்பூசி திருவிழா நடத்துகிறார்கள். மிகப்பெரிய அளவில் நன்கொடை பெறப்பட்டு உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதி என்ன ஆனது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?