இந்தியா
இதுக்கு தடுப்பூசி போடாமலே இருக்கலாம்!… அதிர்ச்சி தரும் வீடியோ….
இந்தியாவில் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா பரவல் துவங்கியது. தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என அரசு வலியுறுத்தியது. ஆனால், பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்குள் கொரோனா 2வது அலை துவங்கியது. இதில் பலரும் உயிரிழந்தனர்.
எனவே, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு கொரோனாவிலிருந்து தப்பித்தால் நல்லதுதானே என்கிற எண்ணம் பரவலாக மக்களிடையே எழுந்தது. 2ம் அலை பல உயிர்களை பலி வாங்கி சென்றதால் பொதுமக்களிடையே பீதி எழுந்துள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் தற்போது வெகுவான எழுந்துள்ளது. ஆனால், அதேநேரம், தடுப்பூசி தட்டுப்பாடுகளால் தடுப்பூசி போடும் இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக கூடி, தள்ளு முள்ளுடன் தடுப்பூசி போட ஆர்வம் காட்டும் சம்பவங்கள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பீகார் மாவட்டத்தில் கோபல்காஞ்ச் எனும் இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டமாக நின்று தடுப்பூசி போட வரிசையில் நிற்கும் வீடியோவை ஒரு பத்திரிக்கையாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் இப்படி நின்றால் கொரோனாவை எப்படி தடுப்பது?… பீகாரில் என்ன நடக்கிறது?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ‘இப்படி நின்னு தடுப்பூசி போடுவதற்கு அதை செய்யாமலே இருக்கலாம்’ என பதிவிட்டு வருகின்றனர்.
SHOCKING Scenes at a vaccination centre in Bihar’s Gopalganj. Social distancing, Covid protocols go for a toss. What’s happening in Bihar?? pic.twitter.com/gf79A5aNdB
— Prashant Kumar (@scribe_prashant) July 13, 2021