Connect with us

தமிழ்நாடு

கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவையில்லை: ராதாகிருஷ்ணன்

Published

on

தமிழகத்தில் தினந்தோறும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நேற்று மட்டும் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களது உறவினர்கள் ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் ரெம்டெசிவிர் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருவதே இந்த கூட்டத்திற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் இது குறித்த ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவையில்லை என்றும் தனியார் மருத்துவமனைகள் தேவை இல்லாமல் இம்மருந்தை அனைத்து நோயாளிகளுக்கும் பரிந்துரை செய்கிறது என்றும் அவ்வாறு பரிந்துரை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

ரெம்டெசிவிர் மருந்து ஒரு சில குறிப்பிட்ட கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே தேவைப்படும் என்றும் அவர்களுக்கு மட்டுமே அந்த மருந்தை செலுத்தினால் போதுமானது என்றும் ஏற்கனவே மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?