இந்தியா
நீதி கிடைத்தது நிர்பயாவுக்கு
நீதி கிடைத்தது நிர்பயாவுக்கு
தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி பேருந்தில் தனது நண்பருடன் பயணித்த மருத்துவ மாணவி 6 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
சிங்கப்பூர் அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் 2013 ஜனவரி மாதம் இறந்தார்.
குற்றவாளிகளில் ஒருவன் சிறார் என்பதால் 3 ஆண்டுகள் தண்டனை பெற்று பின் விடுதலை செய்யப்பட்டான்.
எஞ்சிய 5 பேருக்கும் கிழமை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.அதை உயர்நீதிமன்றமும்,உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.அதில் பேருந்து ஓட்டுநர் ராம்சிங் என்பவன் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
மீதம் இருந்த அக்ஷய்குமார்,பவன்,முகேஷ்,வினய் ஆகியோர்க்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்பாக தண்டனையில் இருந்து தப்ப நான்குபேரும் தனித்தனியாகக் குடியரசு தலைவரிடம் கருணை மனு அளித்தனர். குடியரசுத் தலைவர் அனைவரது மனுக்களையும் நிராகரித்தார்.
அதைத்தொடர்ந்து இன்று காலை 5.30 மணிக்கு நான்கு பேரும் தூக்கிலிடப்பட்டனர்.நான்கு பேரும் தங்களது கடைசி ஆசையைத் தெரிவிக்கவில்லை என்று திகார் சிறை நிர்வாகம் தெரிவித்தது .
தனது மகளுக்கு நீதி கிடைத்து விட்டதாக நிர்பாயாவின் தாய் கண்ணீர் மல்க கூறினார்.மக்களாலும்,நீதித்துறையாலும் ,ஊடகத்தாலும் தான் தன் மகளுக்கு நீதி கிடைத்து இருக்கிறது என்று நிர்பாயாவின் தந்தை நன்றி தெரிவித்துள்ளார்.