Connect with us

இந்தியா

இந்தியாவில் கிடுகிடுவென பரவும் புதுவகை கொரோனா; அதிவேக தொற்றாக மாறும் அபாயம் – எய்ம்ஸ் எச்சரிக்கை

Published

on

new coronavirus strain

இந்தியாவில் கடந்த ஒரு வார காலமாக புதுவகை கொரோனா வைரஸ் தொற்று கிடு கிடுவென பரவி வருகிறது. இந்த புதுவகை தொற்று முன்பை இருந்த கொரோனா தொற்றை விட மிக அதிவேகமாக பரவும் அபாயம் உள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ரந்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவின் புதிய வகை, தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று, நாட்டில் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது மகாராஷ்டிராவில் அது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவைத் தவிர கேரளா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் இந்தப் புதிய வகை கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

தற்போது கொரோனா தொற்றுக்கு எதிராக நாட்டில் இரு வகைத் தடுப்பூசி மருந்துகள் முன்களப் பணியாளர்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் மொத்தம் உள்ள 3 கோடி முன்களப் பணியாளர்களில் சுமார் 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றும், அடுத்து தடுப்பூசி அதிகம் தேவைப்படும் 27 கோடி பேருக்கு கொடுக்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி, புதிய வகை கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் திறனுடையதா என்னும் கேள்வியும் எழுந்துள்ளது.

இப்படியான சூழலில் தான் மருத்துவர் குலேரியா, ‘நம் நாட்டில் பொதுவாக கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் திறன் மொத்த மக்கள் தொகைக்கும் வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதில் உண்மையில்லை. புதுவகை கொரோனா மிகவும் அபாயகரமானது மற்றும் அதிகமாக பரவக்கூடியது. இதற்கு முன்னால் கொரோனா தொற்றால் அவதிப்பட்டவர்களுக்கும் இந்த புதுவகை கொரோனா மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தலாம்’ என்கிறார்.

புதுவகைத் தொற்றால், மீண்டும் நாட்டில் அதிக பரிசோதனைகள், பாதிப்பு இருப்பரைத் தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற நடவடிக்கைகளில் அரசுகள் துரிதப்படுத்த வேண்டி வரலாம் எனப்படுகிறது.

 

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?