இந்தியா
ஆள் உயர ராஜ நாகத்தை குளிப்பாட்டும் நபர்….வைரல் வீடியோ
பொதுவாக பாம்பு என்றாலே மனிதர்கள் அலறியடித்துக்கொண்டுதான் ஓடுகிறார்கள். அதனால்தான் பாம்பென்றால் படையும் நடங்கும் என அக்காலத்திலேயே பழமொழி சொன்னார்கள்.
ஆனால், உண்மையில் பாம்பு மனிதர்களின் காலடி சத்தம் கேட்டாலே அங்கிருந்து பயந்து ஓடும். அதை மிதித்தோ அல்லது துன்புறுத்தினால் மட்டுமே அது நம்மை தாக்க துவங்கும். அதுவும் தன் உயிரை பாதுகாத்து கொள்ளவே!.
இந்த உண்மை புரியாமல் பாம்பை கண்டாலே அதை அடித்து கொள்ள வேண்டும் என பலரும் நினைக்கிறார்கள்.அதேபோல், இரை என வரும் போது மனிதனோ, விலங்கோ அதை முழுதாக விழுங்கிவிடும் மலைப்பாம்புகளும் உள்ளது. ஆனாலும்,ராஜ நாகத்தையே சிலர் அசால்ட்டாக டீல் செய்வார்கள். இது தொடர்பான சில வீடியோக்களை நாம் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பார்த்துள்ளோம்.
இந்நிலையில், ஆள் உயர ராஜ நாகத்தை ஒருவர் தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ செப்டம்பர் 23ம் தேதி பதிவிடப்பட்டு இதுவரை 34 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்
View this post on Instagram