செய்திகள்
தீண்டாமை சுவர் விவகாரம்!. கல்லால் தாக்கி பெண்ணின் கால் உடைப்பு….அதிர்ச்சி வீடியோ…
தீண்டாமை என்பது பாவச்செயல்.. தீண்டாமை என்பது பெருங்குற்றம் என மாணவர்களின் புத்தகங்களில் அச்சிடப்பட்டிருந்தாலும் நடைமுறையில் தமிழகத்தின் பல ஊர்களிலும் தீண்டாமை இன்னும் கடைபிடிக்கப்பட்டுதான் வருகிறது.
இறந்து போன உடலை கூட இந்த வழியாக எடுத்து செல்லக்கூடாது என மேல் சாதி மக்கள் கூறுவதால், சில கிலோ மீட்டர் சுற்றி பிணற்றை எடுத்து சென்று அடக்கம் செய்யும் இழிவு இப்போதும் தமிழகத்தில் சில பகுதிகளில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சில இடங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் இந்த பக்கம் வரக்கூடாது என மேல் சாதியினர் சுவரே எழுப்பியுள்ளனர்.
இது போன்ற ஒரு சுவர் சேலம் மாவட்டம் நங்கவள்ளி அம்பேத்கார் நகரிலும் தீண்டாமை சுவர் உள்ளது. இந்நிலையில், இந்த சுவரை அகற்ற வேண்டும் என புகார் கொடுத்த தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு பெண்மணியை அப்பகுதி மக்கள் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண் மீது ஒருவர் கல்லை கொண்டு எறிய அது அவரின் காலில் பட்டு அவர் வலியால் துடிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
இதையடுத்து, தலித்துகள், பெண்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்களை தீண்டாமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அம்பேத்கர் நகரில் தீண்டாமை சுவரை அகற்ற கோரிக்கை விட்ட நிலையில் பெண்ணை கொடூரமாக கல்லால் தாக்கி காலைஉடைத்து உள்ளனர் #தீண்டாமை_சுவர். #CMCTamilnadu pic.twitter.com/oFlxtO7Zsi
— M.????ℯ???????????????????????????????????????? (@Senthil69103922) November 19, 2021