இந்தியா
ரபேலில் மத்திய அரசு இப்படியே மௌனம் காக்க கூடாது.. கமல்ஹாசன் அதிரடி
சென்னை: ரபேல் குறித்து மத்திய அரசு மேலும் மௌனம் காக்க கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ரபேல் ஒப்பந்தம் பற்றி அரசு தனது மௌனத்தை கலைக்க வேண்டும்.
அரசு தவறு செய்ததாக நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை. ஆனால் எல்லோருக்கும் அந்த சந்தேகம் உள்ளது. மக்களின் சந்தேகத்தை அரசு போக்க வேண்டும்.
ஒப்பந்தத்தை பற்றி உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.இதில் வெளிப்படைத்தன்மையை அரசு கடைபிடிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.