தமிழ்நாடு
பெரியாரை பின்பற்றும் ஸ்டாலின், கமல் முட்டாள்கள் தான்: எச்.ராஜா விமர்சனம்
பெரியாரைப் பின்பற்றும் ஸ்டாலின், முட்டாள் தான் என அனைவருக்கும் தெரியும் அதேபோல் பெரியாரைப் பின்பற்றும் கமல்ஹாசனும் முட்டாள் தான் என செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக பிரமுகர் ஹெச் ராஜா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் வாக்கு எண்ணும் மையம் அருகே மர்மமான சில விஷயங்கள் நடப்பது குறித்து தமிழக தேர்தல் ஆணையத்தில் கமலஹாசன் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து செய்தியாளர்களிடம் கூறிய எச் ராஜா அவர்கள் ’கமல்ஹாசன் நடிப்பில் மட்டுமே பெரிய ஆள், வாக்கு எண்ணும் மையம் அருகே கண்டெய்னர், மொபைல் டாய்லெட் என எது இருந்தாலும் அவர் பயப்படுகிறார். இவரெல்லாம் ஒரு உலக நாயகனா?.
ஸ்டாலின் முட்டாள் என்பது தெரியும், அதுபோல பெரியாரை பின்பற்றுவதாகக் கூறும் கமல்ஹாசனும் முட்டாள் தான், தமிழ்நாடு இன்று முட்டாள் நாடாக மாறி வருகிறது என்றும் எச்.ராஜா கூறினார்.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கலாம் என நீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில் அத்தியாவசிய தேவையான ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவேண்டும் இதற்கு எந்தவித ஆட்சேபனையும் செய்யக்கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.