Connect with us

உலகம்

இந்தோனேசியாவில் பயங்கர சுனாமி: பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!

Published

on

இந்தோனேசியாவின் சுந்தா நீரிணைப்பு பகுதியில் உள்ள அனாக் கிராக்கட்டு எரிமலை வெடித்ததால் நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் அங்கு பயங்கர சுனாமி தாக்கியுள்ளது. இந்த சுனாமியின் காரணமாக 220-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சுனாமி குறித்து தெரிவித்த இந்தோனேசிய தேசிய பேரிடர் மேலாண்மை,நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி அலைகள் தாக்கின என்று முதலில் நினைத்தோம். ஆனால் கிராக்கட்டு எரிமலையில் உள்ள குட்டி எரிமலை வெடித்து கடலுக்கடியில் ஏற்பட்ட நிலச்சரிவால் சுனாமி ஏற்பட்டது என தெரிவித்துள்ளது.

சுந்தா ஸ்ட்ரைட், பண்டங்க்ளாங், செராங், தெற்கு லம்பூங் போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் கடற்கரை பகுதிகளில் சுனாமி அலை தாக்கியுள்ளது. இதனால் சுமார் 222 பேர் பலியாகி இருப்பதாகவும், 843 பேர் காயமடைந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் மாயமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட பல உலக தலைவர்கள் இந்த சோக சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது டுவிட்டரில், நட்பு நாடான இந்தோனேசியாவுக்கு நிவாரணப் பணிகளில் உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?