உலகம்
ஒரே கிராமத்தையே பிணங்களுக்காக அர்ப்பணிக்க திட்டம்.. இந்தோனேஷியா சுனாமி!
ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் சுனாமி காரணமாக பலியானவர்களின் உடலை மொத்தமாக ஒரு கிராமத்தில் புதைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் அங்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 8 நாட்களுக்கு முன் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேஷியாவில் சுனாமி காரணமாக இதுவரை 1624 பேர் பலியாகி உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவின் சுலசேசி தீவில் உள்ள பலு என்ற பகுதியில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
இவர்களுக்காக மொத்தமாக பெரிய கிராமம் ஒன்றை பயன்படுத்த போவதாக தகவல் வருகிறது. இதற்காக அங்கு இருக்கும் மதகுருமார்களிடமும், உள்ளூர் ஆட்சியாளர்களிடம் பேசி வருகிறார்கள். ஒரு கிராமத்தை அப்படியே பிணங்களை புதைக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.