இந்தியா
கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் – இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா
கடந்த சில நாட்களாகவே இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றில் கொரோனா 3வது அலை துவங்கியுள்ளது. மேலும், 2வது அலையை விட 3வது அலை மிக வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 38 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 75 லட்சத்து 18 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் தற்போது 17 லட்சத்து 36 ஆயிரத்து 628 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 761ஆக அதிகரித்துள்ளது.
இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.