Connect with us

செய்திகள்

வங்கி மேலாளரை சுத்தியால் அடித்து கொலை செய்த கணவர்.. பகீர் பின்னணி….

Published

on

murder

காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை, கணவரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் சென்னை அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாடி கலைவாணர் நகர் பகுதியில் வசித்து வருபவர் அச்சுதானந்தன்(40). இவரின் மனைவி மனோபாரதி(37). இவர் கிண்டி பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் 13 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அச்சுதானந்தனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில் குடிக்கு அடிமையாகியுள்ளார். எனவே, வேலைக்கே செல்லாமல் நாள் முழுவதும் மதுஅருந்தி வந்துள்ளார். எனவே, இது தொடர்பாக அவருக்கும், அவரின் மனைவிக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.

நேற்று மாலை 4 மணியளவில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வீட்டில் இருந்து சுத்தியால் மனைவியின் தலையில் அச்சுதானந்தன் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில், மனோபாரதி பலத்த காயமடைந்தார். எனவே, ஆம்புலன்ஸ் மூலம் அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். எனவே, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஜெ.ஜெ.நகர் போலீசார் அச்சுதானந்தனை கைது செய்தனர். மேலும், எதற்காக அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?