Connect with us

செய்திகள்

கரிநாளன்று முழு ஊரடங்கு… தமிழக அரசு கொடுத்த அதிர்ச்சி…..

Published

on

pongal festival day

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதை அடுத்து கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில் ஊரடங்கு தற்போது ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பொங்கல் பண்டிகை நாட்களான 14.01.2022 முதல் 18.01.2022 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் வரும் ஜனவரி 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஏனெனில், அன்று பொங்க பண்டிகையின் கடைசிநாளான உழவர் திருநாள் ஆகும். நகரம் மற்றும் கிராமங்களில் அந்த நாளை கரிநாள் என அழைப்பார்கள். அன்று மாமிச விரும்பிகள் மாமிச உணவுகளை உண்டு மகிழ்வர். அதுமட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து ஊர்களிலும், தெருக்களிலும் அன்று பொங்கல் விழா கொண்டாடுவார்கள்.

குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள், இசை நாற்காலி, நடன போட்டி, வழுக்கு மரம் ஏறுதல், ஆர்கெஸ்ட்ரா, பானை உடைத்தல், கோலப்போட்டி, ரேக்ளா ரேஸ் என பல விளையாட்டுகள் நடத்தப்பட்டு பரிசு வழங்குவார்கள். ஆனால், இதுவெல்லாம் நடந்தால் மக்கள் அதிகமாக கூடுவார்கள். எனவே, கொரோனா எளிதில் பரவும் என்பதால் இந்த வருடம் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. எனவே, மக்கள் எதையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வணிகம்20 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?