இந்தியா
அடி பம்பில் அடித்து தண்ணீர் குடிக்கும் யானை – வைரல் வீடியோ
விலங்குகளில் அதிக புத்திசாலித்தனம் உள்ள விலங்கினம் யானை. ஆனால், யானைகளின் வாழ்விடங்களை மனிதன் ஆக்கிரமிக்க துவங்கி விட்டான். எனவே, தண்ணீர் மற்றும் உணவுக்காக யானைகள் வாழும் இடத்திலிருந்து மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு வருகிறது. சில சமயம் மனிதர்களை தாக்கி கொன்றும் விடுகிறது. இப்படி பலர் இறந்தும் போயுள்ளனர்.
இந்நிலையில், தாகத்திற்காக தண்ணீர் தேடி வந்த யானை ஒன்று மக்கள் தண்ணீர் பிடிக்கும் அடிபம்பில் மனிதர்களை போலவே அடி பம்பை அடித்து தண்ணீர் குடித்து விட்டு செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் ஆச்சர்யம் என்னவெனில், தாகம் தணிந்தவுடன் அடி பம்பை அடிப்பதை யானை நிறுத்திவிட்டு செல்கிறது.
இந்த வீடியோவை பகிர்ந்து ‘யானை கூட தண்ணீர் அவசியத்தை உணர்ந்துள்ளது. மனிதர்கள் நாம் யானைகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்’ என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
एक हाथी भी #जल की एक-एक #बूंद का महत्व समझता है। फिर हम इंसान क्यों इस अनमोल रत्न को व्यर्थ करते हैं?
आइए, आज इस जानवर से सीख लें और #जल_संरक्षण करें। pic.twitter.com/EhmSLyhtOI— Ministry of Jal Shakti ???????? #AmritMahotsav (@MoJSDoWRRDGR) September 3, 2021