Connect with us

தமிழ்நாடு

எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார்: முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை பங்கமாய் கலாய்த்த தினகரன்!

Published

on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுமுறை பயணமாக 14 நாட்களுக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு தான் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்.

இந்த நாடுகளில் உள்ள தொழில் அதிபர்களை சந்திக்க உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்புவிடுக்க உள்ளார். முதல்வரின் இந்த பயணத்தில் அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கரும் சென்றுள்ளார். இந்நிலையில் முதல்வரின் இந்த வெளிநாட்டு பயணத்தை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலாய்த்துள்ளார்.

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து பேசிய டிடிவி தினகரன், எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார் என்று இல்லாமல் முதலீடுகளை ஈர்த்து வந்தால் சந்தோஷம். தமிழகத்துக்கு முதலீடுகளைப் பெற்று வருவதற்காகச் செல்வதில் எந்த தவறும் இல்லை. முதலீடுகள் வருகிறதா என்று பார்ப்போம். வெயிட் அண்ட் சி என்றார். மேலும், முதல்வர்கள் எல்லாம் வெளிநாடுகள் சென்றால் பொறுப்பை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு செல்வார்கள்.

ஆனால் இப்போது டெக்னாலஜி வளர்ந்து விட்டது. அதனால் தானே பார்த்துக் கொள்கிறேன் என்ற நிலை இருக்கிறதென்றால் நம்பிக்கையின்மையும் பயமும் தான் காரணம். அதிமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை மாதிரி. ஆட்சி, அதிகாரம் கையில் இருப்பதால் ஒன்றாக இருக்கிறது. ஆட்சி முடியட்டும், நெல்லிக்காய்கள் சிதறிவிடும் என்று விமர்சித்தார் தினகரன்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?