தமிழ்நாடு
சமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: 1ஆம் தேதியே உயர்வா?
சமையல் கேஸ் சிலிண்டர் விலை கடந்த மாதம் 3 முறை உயர்ந்த நிலையில் தற்போது இந்த மாதம் தொடங்கிய முதல் நாளிலேயே மீண்டும் உயர்ந்துள்ளது பொது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சமையல் கேஸ் சிலிண்டர் விலை பிப்ரவரி மாதத்தில் முதலில் 25 ரூபாய் அதன் பின்னர் 50 ரூபாய் அதன் பின்னர் மீண்டும் 25 ரூபாய் என ஒரே மாதத்தில் 100 ரூபாய் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிப்ரவரி ஆரம்பத்தில் ரூபாய் 710 என்று இருந்த சிலிண்டரின் விலை பிப்ரவரி இறுதியில் ரூ.810 ஆக உயர்ந்தது
இந்த நிலையில் தற்போது மார்ச் மாதம் ஒன்றாம் தேதி இன்று பிறந்திருக்கும் நிலையில் திடீரென மீண்டும் 25 ரூபாய் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் 25 ரூபாய் உயர்த்தி உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் இன்றைய சிலிண்டரின் விலை ரூ.835ஆக உயர்ந்துள்ளது
இதே ரீதியில் சென்றால் இன்னும் ஒருசில மாதங்களில் சிலிண்டரின் விலை ரூ.1000ஐ தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை ரூ.100ஐ நெருங்கிவரும் நிலையில் சிலிண்டரின் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.