Connect with us

தமிழ்நாடு

ஊரடங்கால் தடுப்பூசி பணிக்கு பாதிப்பு வரக்கூடாது: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் பகல் நேர ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த ஊரடங்கு அறிவிப்பால் தடுப்பூசி போடும் பணியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.

இந்த நிலையில் மத்திய அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் மனோகரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடைந்து உள்ளதாகவும், இதுவரை 12 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் தடுப்பூசி மையத்திற்கு மக்கள் சென்று வருவதற்கு எந்தவித தடையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு என தனி கட்டிடம் இருக்க வேண்டும் என்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மூலம் தடுப்பூசி போட வருபவர்களுக்கு கொரோனா பரவி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

வணிகம்11 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?