Connect with us

இந்தியா

2 மகள்கள் இறந்த அதே நாளில் இரட்டை குழந்தைகள் – மகிழ்ச்சியில் பெற்றோர்

Published

on

twins

பெற்ற குழந்தைகள் கண் முன்னே இறப்பது போன்ற துயரமான சம்பவம் வேறு எதுவும் கிடையாது. ஆந்திர மாநிலம் விஷாகப்பட்டினத்தை சேர்ந்த அப்பால ராஜு மற்றும் பாக்கியலட்சுமி தம்பதியினர் 2 வருடங்களுக்கு முன்பு இந்த துயரத்தை சந்தித்தனர்.

2019ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி கோதாவரி ஆற்றில் குடும்பத்துடன் படகு பயணம் மேற்கொண்ட போது ஏற்பட்ட விபத்தில் அவர்களின் இரட்டை குழந்தைகளான இரு மகள்களும் பலியாகினர். மேலும், அந்த விபத்தில் அப்பால ராஜூவின் தாயாரும் மரணமடைந்தார். சோகத்தில் இருந்த தம்பதி இருவரும் தங்களுக்கு மீண்டும் குழந்தை வேண்டும் என்பதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டனர்.

இயற்கையாக் குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதை தாண்டிவிட்டதால் IVF எனப்படும் சிகிச்சையை மேற்கொண்டனர். இதன் விளைவாக கர்ப்பமான பாக்கியலட்சுமிக்கு கடந்த 15ம் தேதி அதாவது, இரட்டை குழந்தைகளை பறிகொடுத்த அதே மாதம், அதே நாளில் குழந்தை பிறந்தது.

இதில், ஆச்சர்யம் என்னவெனில் மீண்டும் அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இறந்து போன தங்களின் மகள்களே தங்களுக்கு மீண்டும் மகளாக பிறந்துள்ளனர் என அவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.

ஒரு குழந்தை 1.9 கிலோவும், அடுத்த குழந்தை 1.6 கிலோவும் உள்ளது. குழந்தைகள் இரண்டும் ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வணிகம்9 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?