இந்தியா
கொரோனா வைரஸ் காற்றிலும் பரவுமா? உலக சுகாதார அமைப்பின் விளக்கம்!
உலகில் மனித இனத்தையே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தனிமனித இடைவெளியின்றி காணப்பட்டாலும் மாஸ்க் அணியாமல் இருந்தாலும் பரவும் என்று தான் இதுவரை உலக சுகாதார மையம் தெரிவித்து வந்தது, இந்த நிலையில் கொரோனா வைரஸ் காற்றிலும் பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் காற்றில் பரவ வாய்ப்பு இல்லை என்றும் கொரோனா பாதித்தவர்களால் மட்டும் தான் மற்றவர்களுக்கு பரவும் என்றும் உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு கூறியது. காற்றில் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பு கூறி வந்த நிலையில் தற்போது செய்யப்பட்ட ஆய்வுகளில் காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறியபோது கொரோனா வைரஸ் என்பது ஒரு மீட்டர் இடைவெளியில் கொரோனா பாதித்தவர்கள் மூலம் காற்றில் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் அதனால் கொரோனா வைரஸ் பாதித்தவர்களிடமிருந்து ஒரு மீட்டர் தள்ளி இருப்பது நல்லது என்றும் கூறப்பட்டுள்ளது.
மோசமான காற்றோட்டம் அல்லது நெரிசல் மிகுந்த பகுதிகளில் கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக் கூடும் என்றும் அதேபோல் கொரோனா வைரஸ் இருக்கும் இடத்தை தொட்டு விட்டு பின்னர் கைகளை சுத்தம் செய்யாமல் கண் மூக்கு வாய் ஆகிய பகுதிகளில் தொட்டால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும் கொரோனா வைரஸ் காற்றில் பரவுவது இன்னும் நூறு சதவீதம் உறுதி செய்யப்படவில்லை என்றும் இது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.