Connect with us

உலகம்

6 அடி தாண்டியும் பரவும் புதுவகை கொரோனா; தற்காத்துக் கொள்வது எப்படி- விஞ்ஞானிகள் அறிவுரை!

Published

on

Us corona death toll overtakes world war 2

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று தற்போது இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது.

நாளுக்கு நாள் கொரோனாவின் புதிய வகைகள் உலகின் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டு வருகிறது. மேலும் இந்த கொரோனாவின் புதிய வகைகளை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தும் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி கொரோனா தொற்றை எதிர்கொள்ள, முறையான முகக் கவசம் அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது உள்ளிட்டவைகளே சிறந்த வழி என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. குறிப்பாக பொது இடங்களில் ஒருவருக்கும் மற்றவருக்கும் சுமார் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும் என்று சர்வதேச சுகாதார அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

அதே நேரத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானக் குழு ஒன்று, கொரோனா வைரஸ் தொற்றானது 6 அடியைத் தாண்டியும் பரவக்கூடும். காற்றில் வைரஸ் மிதந்து எதிர்பாராத வகையில் மற்றவர்களை பாதிக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதே நேரத்தில், ‘முறையான காற்றோட்ட வசதி இல்லாத இடங்களில் அதிக நேரம் இருப்பதை தவிர்ப்பது, முறையான முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்டவையை செய்து வந்தால் தொற்றிலிருந்து நம்மை போதுமான அளவு தற்காத்துக் கொள்ள முடியும்’ என்று விஞ்ஞானக் குழு அறிவுரை கூறியுள்ளது.

 

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?