கிரிக்கெட்
ஒரே ஒரு வெற்றியால் புள்ளிப்பட்டியலில் 2வது இடம்: சிஎஸ்கே அசத்தல்!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அந்த அணி ஒரே வெற்றியால் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் தற்போது உள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன் 8வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று பஞ்சாப் அணி கொடுத்த 107 என்ற இலக்கை 15.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து அந்த அணியின் ரன் ரேட் 0.616 என்று உயர்ந்ததை அடுத்து அந்த அணி பெங்களூருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் தீபக் சஹார் மிக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டை எடுத்ததன் மூலம் அவர் ஆட்டநாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மொயின் அலி 46 ரன்களும் டுப்லஸ்ஸிஸ் 36 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.