இந்தியா
தெலுங்கானாவில் யோகி ஆதித்யநாத்.. பாஜகவிற்காக களமிறங்கும் பரிபூர்ணானந்தா!
ஹைதராபாத்: பாஜக கட்சியில் இணைந்து இருக்கும் சாமியார் பரிபூர்ணானந்தா அம்மாநில தேர்தலில் முக்கிய உறுப்பினராக முன்னிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. முக்கிய உறுப்பினர் என்றால், பாஜக தெலுங்கானாவில் வெற்றிபெறும்பட்சத்தில் அவர் முதல்வராக பதவி ஏற்க கூட வாய்ப்புள்ளது.
தெலுங்கானாவில் வரும் டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் பாஜக கட்சியில் இணைந்து இருக்கும் சாமியார் பரிபூர்ணானந்தா முக்கிய வேட்பாளராக களமிறக்கப்பட வாய்ப்புள்ளது.
ஆந்திராவில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது காக்கிநாடாவில் மடம் நடத்தி வருகிறார். எல்லா சாமியார்கள் போலவே இவருக்கும் பெரிய பக்தர்கள் படையும் அரசியல் துணையும் இருக்கிறது.
எந்த அளவிற்கு அரசியல் துணை என்றால் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் பரிபூர்ணானந்தாவை சந்தித்து வாழ்த்து பெறும் அளவிற்கு செல்வாக்கு பெற்றவர்.