கிரிக்கெட்
கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி: டிவில்லியர்ஸ் அபாரம்!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேற்று தொடங்கிய நிலையில் நேற்றைய முதல் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது என்பதை பார்த்தோம். நேற்றைய போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்துவீசியதையடுத்து மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 160 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி 20வது ஓவரில் கடைசி பந்தில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டிவில்லியர்ஸ் 20ஆவது ஓவர் வரை விளையாடி 48 ரன்கள் அடித்தார். மேக்ஸ்வெல் 39 ரன்கள் எடுத்தார்.
கடைசி ஓவரில் வெற்றிபெற 7 ரன்கள் தேவை என்ற நிலையில் டிவில்லியர்ஸ் மற்றும் பட்டேல் விளையாடியனர். இந்த நிலையில் முதல் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த நிலையில் 4-வது பந்தில் டிவிலியர்ஸ் அவுட்டானார். இதனையடுத்து சிராஜ் மற்றும் பட்டேல் இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் தலா ஒரு ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்ஷல் பட்டேல் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.