Connect with us

தமிழ்நாடு

மங்கள நாட்களில் கூடுதல் கட்டணம்: அதிர்ச்சி தந்த பத்திர பதிவுத்துறை!

Published

on

மங்களகரமான நாட்களில் பத்திரம் பதிவு செய்தால் கூடுதல் கட்டணம் என பத்திரப்பதிவு துறை அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மங்களகரமான நாட்களான சித்திரை திருநாள், ஆடிப்பெருக்கு, தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில் பத்திர பதிவு அலுவலகம் திறந்து வைக்க உத்தரவு பிறப்பித்து பத்திரம் துறை தலைவருக்கு முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் இந்த நாட்களில் பத்திரம் பதிவு செய்ய வருபவர்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் சித்திரை முதல் நாளான ஏப்ரல் 14, ஆடிப்பெருக்கு நாளான ஆகஸ்ட் 87 மற்றும் தைப்பூசம் நாளான ஜனவரி 18 ஆகிய மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலர்களை செயல்பாட்டில் வைத்து பதிவினை மேற்கொள்ளவும் மற்றும் அத்தகைய நாட்களில் மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மங்களகரமான நாட்களில் அதிக அளவு பத்திரப் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை வருவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பத்திரபதிவுத்துறையின் இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்11 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?