Connect with us

இந்தியா

சிகிச்சை பெற்று வந்த 20 கொரோனா நோயாளிகள் தப்பியோட்டம்: பெரும் பரபரப்பு!

Published

on

சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 20 பேர் மருத்துவமனையில் இருந்து திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது கும்பமேளா திருவிழா நடைபெற்று வரும் நிலையில் அதிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்கள் 38 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 20 பேர் திடீரென காணாமல் போயுள்ளதாக மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் தப்பிச் சென்றவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 7 பேர் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்றும் மேலும் உத்திரபிரதேசம் ஹரியானா மற்றும் ஒரிசாவில் சேர்ந்தவர்கள் தலா நான்கு பேரும் என்றும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் காணாமல் போன கொரோனா நோயாளிகள் மீது பேரிடர் மேலாண்மை மற்றும் தொற்று நோய் பரவும் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக 20 கொரோனா நோயாளிகளின் வீடுகளில் விசாரணை செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். தப்பியோடிய 20 நோயாளிகளும் இன்னும் ஒரு சில நாட்களில் பிடிபடுவார்கள் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கும்பமேளாவில் கலந்து கொண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20 பேர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்13 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?