Connect with us

தமிழ்நாடு

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆல்பாஸ்? துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தகவல்

Published

on

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்துக் கொண்டே செல்வதை அடுத்து ஏற்கனவே 1 முதல் 8 வரை படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 9, 10, 11 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து என்றும் அவர்களுக்கும் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருவதை அடுத்து 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆல்பாஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து நேற்று தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் பேசிய போது துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ’12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆல் பாஸ் வழங்குவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தேனி மாவட்டம் போடி தொகுதியில் போட்டியிடும் ஓ பன்னீர்செல்வம் அந்த பகுதியில் உள்ள சீலையம்பட்டி என்ற பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியபோது, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆல் பாஸ் வழங்குவது தொடர்பாக தமிழக மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த கோரிக்கை விரைவில் பரிசீலிக்கப்படும் என்றும் இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடைபெறுவது சந்தேகமே என்று தெரிகிறது.

வணிகம்20 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?