காலநிலை மாறிவரும் சூழலில், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது மிகவும் அவசியமாகிறது. H3N2, டெங்கு போன்ற வைரஸ் தொற்றுகள் அதிகரிக்கும் இந்த காலத்தில், நோயெதிர்ப்பு மண்டலம் பலமாக இருந்தால், உடல் பல்வேறு தொற்றுக்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும்.
முருங்கைக்கீரை உடலில் நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டும் சிறந்த உணவாகும். இதில் உள்ள வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து உடலின் ஆற்றல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. மேலும், முருங்கைக்கீரையில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மைகள் உடலில் வீக்கம் மற்றும் காயங்களை குறைக்கும் பண்பையும் கொண்டுள்ளது.
முருங்கைக்கீரையை சில சக்திவாய்ந்த பொருட்களுடன் சேர்த்தால், அதன் நோயெதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும்.
மஞ்சள் – மஞ்சளில் உள்ள குர்குமின் வீக்கம் மற்றும் அழற்சியை குறைத்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. முருங்கைக்கீரை + மஞ்சள் சூப் உட்கொள்வது சிறந்தது.
இஞ்சி – ஆன்டி-ஆக்ஸிடன்ட்டும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகளும் கொண்ட இஞ்சி, முருங்கைக்கீரையுடன் டீயாக குடித்தால் நோயெதிர்ப்பு சக்தி இருமடங்கு மேம்படும்.
சிட்ரஸ் பழங்கள் – ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை வைட்டமின் சி வளம் கொண்டவை. முருங்கைக்கீரை + ஆரஞ்சு ஸ்மூத்தி உட்கொள்வதால் உடல் இரும்புச்சத்தை உறிஞ்சி நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடையும்.
பூண்டு – ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் கொண்ட பூண்டு, முருங்கைக்கீரையுடன் சேர்த்து உட்கொள்ளும்போது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பாதாம் – வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட பாதாம், முருங்கைக்கீரை பொரியலுடன் சேர்த்தால், உடல் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் சக்தி இரண்டும் மேம்படும்.
முறையாக எடுத்து கொள்ளும் வழி: முருங்கைக்கீரையை தினசரி உணவில் சேர்க்கவும், மேற்படி பொருட்களை சேர்த்து பருகுவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம். ஆனால், எந்த சப்ளிமெண்ட் அல்லது சேர்மையை எடுத்தாலும், மருத்துவரை அணுகி பரிந்துரைக்கப்பட்ட அளவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.