செய்திகள்

ஒரே மேடையில் தாய்க்கும் மகளுக்கும் திருமணம்… கொண்டாடிய உறவினர்கள்!

Published

on

உத்தரபிரதேச மாநிலத்தில் அம்மா- மகள் இருவருக்கும் தத்தமது மாப்பிள்ளைகளுடன் ஒரே மண்டபத்தில் ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது.

உத்தரபிரதேசம் கோரக்பூர் பகுதியில் முதலமைச்சரின் வெகுஜன திருமணம் திட்டத்தின் கீழ் அப்பகுதியைச் சேர்ந்த அம்மா- மகள் இருவரும் ஒரே மேடையிலேயே திருமணம் செய்துகொண்டனர். இத்திருமணத் திட்டத்தின் கீழ் 63 ஜோடிகளுக்கு நடத்தி வைக்கப்பட்ட திருமண விழாவில் இந்த அம்மா- மகள் இருவரும் அவரவர் மாப்பிள்ளைகளை திருமணம் செய்துகொண்டனர்.

53 வயதான பெலி தேவிக்கு ஐந்து குழந்தைகள். இளம் வயதிலேயே கணவரை இழந்துவிட்டார். தனது நான்கு குழந்தைகளுக்கும் திருமணம் முடித்து வைத்த பெலி தேவி தனது ஐந்தாவது மகளின் திருமண தினத்தில் தானும் திருமணம் செய்துகொண்டார். இரு தம்பதியினருக்கும் உறவினர்கள் தங்களது ஆதரவையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

Trending

Exit mobile version