உலகம்

ஃபேஸ்புக்கை அடுத்து மைக்ரோசாப்ட்.. இரண்டாம் கட்ட வேலைநீக்க நடவடிக்கை..!

Published

on

உலகின் முன்னணி ஐடி நிறுவனங்கள் முதல் கட்ட வேலை நடவடிக்கையை சமீபத்தில் எடுத்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக இரண்டாம் கட்ட வேலை நீக்க நடவடிக்கைகளை எடுத்து வருவது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்பட பல நிறுவனங்கள் கடந்த சில மாதங்களில் வேலை நீக்க நடவடிக்கை எடுத்தது என்பதும் இதன் காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலை இழந்த பெரும்பாலான இளைஞர்களுக்கு இன்னும் வேலை கிடைக்காத நிலையில் வேலையில்லா கொண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஒரு சில நிறுவனங்கள் மீண்டும் இரண்டாம் கட்ட வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே 12,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த பேஸ்புக் அடுத்த கட்டமாக 7000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற செய்தியை பெயர் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் இரண்டாம் கட்ட வேலை மிக்க நடவடிக்கையை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது ஜெர்மனியில் உள்ள கிளையில் 120 பேர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. புதிய பணிநீக்க நடவடிக்கை என்பது உலகளாவிய வேலை நீக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மறு சீரமைப்பு மற்றும் ஆட்குறைப்பு முயற்சி காரணமாக ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்த மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது ஜெர்மனி கிளையில் மீண்டும் வேலைக்கு நடவடிக்கையை எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனித வளங்கள், வழக்கறிஞர்கள், நிதி வல்லுநர்கள் மற்றும் உயர்மட்ட நிர்வாகிகள் ஆகியோர்களை குறைப்பதற்கான திட்டங்களை வகுக்கும்படி மைக்ரோசாப்ட் கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரவிருக்கும் வாரங்களில் இன்னும் சில நிறுவனங்களில் அதிகமான ஊழியர்கள் வெளியேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் கடந்த சில நாட்களாக ஒப்பந்ததாரர்களை நீக்கி வருகிறது என்பது தெரிந்தது. அதேபோல் பேஸ்புக் நிறுவனமும் ஊழியர்களுக்கு மதிப்பெண்கள் அளித்து குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டு தொழில்நுட்ப துறையில் மேலும் பணி நீக்கங்கள் அதிகரிக்கும் என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version