Connect with us

இந்தியா

தாய்மொழியில் மருத்துவக் கல்வி: பிரதமர் மோடி பேச்சு!

Published

on

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் சுற்றுப் பயணமாக நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சென்றார். பிரதமர் மோடி சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார். சிக்பள்ளாப்பூரில் இருக்கும் மறைந்த பொறியாளர் சர்.எம்.விசுவேஸ்வரய்யா நினைவிடத்திற்கு சென்று, பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின், சிக்பள்ளாப்பூர் மாவட்டம் முத்தேனஹள்ளியில் உள்ள மதுசூதன் சாய் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தினை பிரதமர் மோடி திறந்து வைத்து பேசினார்.

தாய்மொழி கல்வி

பிரதமர் மோடி பேசுகையில், நம் நாட்டின் பெருமையை அதிகரிக்கும் மொழிகளில் ஒன்று கன்னடமாகும். நமது நாட்டை ஆண்ட முந்தைய அரசுகள் மருத்துவம் மற்றும் தொழில் படிப்புகளை கன்னடத்தில் கற்க வழிவகை செய்யவில்லை. கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் ஆவதனை இந்த அரசியல் கட்சிகள் விரும்பவில்லை.

ஏழைகளுக்காக உழைக்கும் பாஜக தலைமையிலான அரசு கன்னடம் உள்ளிட்ட பிராந்திய தாய்மொழிகளில் மருத்துவம் மற்றும் தொழில் படிப்புகளை படிக்க பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகிறோம். ஏழை மக்ககளை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் அரசியல், நம் நாட்டில் நீண்ட காலமாக நிலைத்திருந்தது. அதனை மாற்றிய பா.ஜ.க. அரசு நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மருத்துவ கல்லூரிகள்

நாட்டில் 2014 ஆம் ஆண்டுக்கு முன்னதாக 300-க்கும் குறைவான மருத்துவ கல்லூரிகளே இருந்தன. இப்போது இந்தியா முழுவதும் 650 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதனுடன் புதியதாக 150 நர்சிங் கல்லூரிகளை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நம் நாடு சுதந்திரம் அடைந்தது முதல் தற்போது வரை எத்தனை மருத்துவர்கள் உருவாகி இருக்கிறார்களோ, அதில் இருந்து இரு மடங்கு மருத்துவர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்படுவார்கள் என மோடி தெரிவித்தார். In

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?