கிரிக்கெட்
லக்னோ அதிரடி: 56 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி அசத்தல் வெற்றி!

16வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 38வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப், முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து, லக்னோ அணி அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் கேஎல் ராகுல், கெயில் மெயிஸ் களமிறங்கினர்.
லக்னோ அதிரடி ஆட்டம்
கேஎல் ராகுல் 12 ரன்னில் அவுட் ஆக, அடுத்து வந்த ஆயிஷ் பதோனியுடன் ஜோடி சேர்ந்த மெயிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். மெயிஸ் 54 ரன்களும், பதோனி 43 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மார்கஸ் ஸ்டாயினஸ் 72 ரன்களும், நிகோலஸ் பூரன் 45 ரன்களும் குவித்தனர்.
முடிவில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்களை குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ரன்களை குவித்து லக்னோ அணி சாதனை படைத்துள்ளது. 2013 ஆம் ஆண்டு புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 263 ரன்கள் குவித்து பெங்களூர் அணி முதல் இடத்தில் உள்ளது.
லக்னோ வெற்றி
258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 9 ரன்னிலும், கேப்டன் தவான் 1 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து களமிறங்கிய அதர்வா தைடே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 66 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த சிக்கந்தர் ராசா 36 ரன்களும், லிவிங்ஸ்டன் 23 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.
அடுத்து களமிறங்கிய சாம் கர்ரன் 21 ரன்களும், ஜிதேஷ் சர்மா 24 ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.