தமிழ்நாடு

திருமணம் ஆகாமல் பெற்ற குழந்தையை ரூ.2.50 லட்சத்துக்கு விற்ற காதலர்கள்!

Published

on

சென்னை: திருமணம் ஆகாமல் பெற்ற குழந்தையை விற்று காதலன் காதலி பணம் பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு காதலால் ஏற்பட்ட மோகத்தில் திருமணத்திற்கு முன்பே குழந்தையைப் பெற்றுக்கொண்ட காதலர்கள், பிறந்த 5 நாட்களே ஆன பெண் குழந்தையை இடைத்தரகர் மூலம் விற்பனை செய்துள்ளனர்.

குழந்தையை விற்றதற்காக 2.5 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்ட காதலன், தனது காதலிக்கு 1 லட்சம் ரூபாய் பங்காக கொடுத்துள்ளார்.

இது குறித்த தகவல் அறிந்த காவல் துறையினர், காதலன் காதலி மற்றும் இடைத்தரகரைக் கைது செய்து விசாரணை செய்து, கோபிச்செட்டி பாளையத்திலிருந்து குழந்தையை மீட்டுள்ளார்கள்.

Trending

Exit mobile version