Connect with us

தமிழ்நாடு

புதுச்சேரியில் ஜூலை 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு: என்னென்ன புதிய தளர்வுகள்?

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஜூலை 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவையில் ஜூலை 15 வரை ஊரடங்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 15 வரை நீடிக்கப்பட்டு உள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் இந்த ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. ஜூலை 15 வரை நீடிக்கப்பட்டு உள்ள ஊர்டங்கில் கடற்கரை, பூங்காக்கள் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உடற்பயிற்சி, யோகா மையங்களில் 50 சதவீதம் பேர் பயிற்சி பெறலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுவையில் உள்ள அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறந்து இருக்க புதுவை அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் மற்றும் கடை நடத்துபவர்கள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் குறிப்பாக முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அடிக்கடி சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து இந்த தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனாலும் பொதுமக்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் இந்த தளர்வுகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?