டிவி

பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இருக்கிறது.. அதற்கு யார் காரணமென்று நெத்தியில் அடித்த மாதிரி சொல்வேன்.. கொந்தளித்த ஆரி!

Published

on

பிக்பாஸ் 26-ம் நாளுக்கான இன்றை ப்ரோமோ வெளியானது. அதில் பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இருக்கு.. அதற்கு யார் காரணமென்று நெத்தியில் அடித்த மாதிரி சொல்வேன் என்று ஆரி கொந்தளித்துள்ளார்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற முக்கியமான இரண்டு போட்டிகள் என்றால் அது லக்சரி பட்ஜெட் டாஸ்க் தங்கமே உன்னைத்தான் தேடி வருவேன் மற்றும் நீங்கா நிணைவுகள், யாரை இந்த வீட்டில் மிஸ் செய்கிறார்கள் பிக்பாஸ் போட்டியாளர்கள் என்ற விளையாட்டு.

தங்கமே உன்னைத்தான் டாஸ்கில் மிகக் குறைவான தங்கத்தை மட்டுமே ஆரி மற்றும் அனிதா சம்பத் இருவரும் சேகரித்து இருந்தனர். லக்சரி பட்ஜெட் டாஸ்க் முடிவில் அது தெளிவாகத் தெரிந்தது.

அடுத்ததாக பிக்பாஸ் போட்டியாளர்கள் யார் மிஸ் செய்கிறார்கள் என்ற கதை சொல்லும் நிகழ்வில், தான் யாரை மிஸ் செய்கிறோம் என்று சொல்லாமல் அதன் இஷ்டத்துக்குக் கண்டதைப் பேசி அனிதா சம்பத் நேரத்தை வீனடத்த சம்பவம் நேற்றைய நிகழ்ச்சி மற்றும் ப்ரோமோவை பார்த்தவர்களுக்குத் தெரிந்து இருக்கும்.

ரொம்ப நீளமாகச் செல்கிறது, போதும் என்று அனிதா சம்பத்தை இடையில் நிறுத்தினார் சம்யுக்தா. பின்னர் தனக்குத் தேவையான நேரத்தை வழங்கவில்லை என்று அனிதா சம்பத் சம்யுக்தாவிடம் விளக்கிக்கொண்டு இருந்தார். ஆக இரண்டு டாஸ்கில் அனிதா சம்பத்தும், ஒரு டாஸ்கில் ஆரியும் சிறப்பாகச் செயல்படவில்லை.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் யார் சரியாக செயல்படவில்லை என்று தேர்வு செய்ய சொல்லியுள்ளார் பிக்பாஸ். அதில் ஆரி மற்றும் அனிதா சம்பத்தைத் தேர்வு செய்துள்ளனர் வீட்டில் உள்ளவர்கள்.

சென்ற வாரமும் ஆரி தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இந்த வாரமும் தொடர்ந்து சரியாகச் செயல்படவில்லை என்ற காரணத்துக்காக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனால் கடுப்பான ஆரி வீட்டில் உள்ளவர்களுடன் பொங்கியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இருக்கிறது. அதற்கு யார் காரணமென்று நெத்தியில் அடித்த மாதிரி சொல்வேன் என்கிறார் ஆதி. அதை இப்போது சொல்லுங்கள் என்கின்றனர் அர்ச்சனா, ரியோ உள்ளிட்ட வீட்டில் உள்ள சிலர். உடனே யார் என்று சொல்லாமல் மழுப்புகிறார் ஆரி.

எல்லோரிடம் நல்லவனாகக் காட்டிக்கொள்வதற்காக (diplomatic) வீட்டில் உள்ளவர்களும், நீங்களும் மறைக்க வேண்டாம், இப்போதே நேரடியாகச் சொல்லுங்கள் என்கிறார் பாலாஜி. உடனே அர்சனா diplomatic என்ற வார்த்தையை எல்லாவற்றுக்கும் பேசி அதைக் கொச்சைப் படுத்த வேண்டும் என்கிறார். பாலாஜியின் முகம் மாறுகிறது. மீண்டும் ஆரி சிறையில் அடைக்கப்படுகிறார்.

இன்று பிக்பாஸ் வீட்டில் ஒரு பெரிய சண்டை ஏற்படுகிறது என்பதை முதல் ப்ரோமோவிலேயே சொல்லி, பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளார் பிக்பாஸ்.

Trending

Exit mobile version