Connect with us

தமிழ்நாடு

ரஜினிக்கு கருத்து செல்ல உரிமையில்லையா? குஷ்பு ஆதரவு டுவீட்!

Published

on

தேசிய கட்சியான காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை முன்னரே வெளியிட்ட நிலையில் தற்போது பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் நதிகள் இணைப்பு குறித்த வாக்குறுதி உள்ளது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், இந்தியாவிலுள்ள நதிகளை இணைக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு குறித்தும், அதற்கென தனி ஆணையத்தை உருவாக்குவோம் எனவும் வாக்குறுதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் நதிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கூறினார் ரஜினிகாந்த்.

ரஜினியின் இந்த பாஜக ஆதரவு கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்களும் இந்த விவகாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இதுகுறித்து கூறியபோது பாஜக தேர்தல் அறிக்கையை ரஜினகாந்த் பாராட்டியது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் ரஜினி இயங்குகிறார் என்பதற்கு இதுவும் ஒரு சான்று என கூறினார்.

இவ்வாறு ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் நடிகையும், காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு ஆதரவு கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள குஷ்பு, பாஜகவின் தேர்தல் அறிக்கையைப் பற்றி ரஜினி சார் பேசியதைவைத்து ஏன் ஊடகங்கள் இவ்வளவு கூப்பாடு போடுகின்றது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் நதிகள் இணைப்பு பற்றி ஒரு வார்த்தைப் பேசினார். அதனால் என்ன? ஓர் இந்தியக் குடிமகனாக ஒரு கருத்தைச் சொல்ல அவருக்கு உரிமை இல்லையா? அதை ஏன் அரசியலாக்க வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?