சினிமா

’தசரா’ படத்திற்காக லட்சக்கணக்கில் செல்வவு செய்த கீர்த்தி சுரேஷ்!

Published

on

நடிகை கீர்த்தி சுரேஷ் ‘தசரா’ படக்குழுவை சேர்ந்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுத்ததற்காக லட்சக்கணக்கில் செலவு செய்திருக்கிறார்.

நடிகர்கள் நானி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘தசரா’ திரைப்படம் இந்த மாதம் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் நானியின் தோற்றம், சமீபத்தில் வெளியான டீசர் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்திருக்கிறது.

இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ’வெண்ணிலா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். சிங்கரேணி பகுதியில் உள்ள வீர்லப்பள்ளி என்ற கிராமத்தைச் சுற்றி நடக்கும் கதையை மையமாகக் கொண்டு ’தசரா’ படம் உருவாகி இருக்கிறது. ’தசரா’ திரைப்படம் தனக்கு மிகவும் நெருக்கமானது எனக்கூறி நடிகை கீர்த்தி சுரேஷ் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, படக்குழுவை சேர்ந்த 130 பேருக்கு, நடிகை கீர்த்தி சுரேஷ் தலா 10 கிராம் தங்க நாணயங்களை, பரிசாக வழங்கி உள்ளார். இவர் கொடுத்த பரிசுகளின் மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் இருக்கும். படக்குழுவை சேர்ந்தவர்களின் உழைப்பைப் பாராட்டும் வகையில் இந்த காரியத்தை கீர்த்தி சுரேஷ் செய்திருப்பது படக்குழுவில் அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது.

Trending

Exit mobile version