Connect with us

இந்தியா

ஒரே இளைஞரை காதலித்த இரு பெண்கள்: சமாதான பேச்சுவார்த்தையில் நடந்த விபரீதம்!

Published

on

ஒரே இளைஞரை இரண்டு பெண்கள் மாறி மாறி காதலித்த நிலையில் மூவரும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது ஏற்பட்ட விபரீதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜோஸ்வா என்ற இளைஞர் அஸ்மிதா என்பவரை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணமாக இருந்த நிலையில் கடந்த 6 மாதமாக ஜோஸ்வாவுக்கு டாக்லின் என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்த அஸ்மிதா, ஜோஸ்வாவுடன் சண்டை போட்டுள்ளார். இதனை அடுத்து ஜோஸ்வா, அஸ்மிதா, டாக்லின் ஆகிய மூவரும் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சோமேஸ்வரன் என்ற கடற்கரைக்கு சென்றனர்.

அங்கு மூவரும் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மூவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிதடி வரை சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அஸ்மிதா தற்கொலை செய்ய முயற்சித்து கடலில் குதித்து உள்ளார். அவரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஜோஸ்வா கடலில் விழுந்து அவரை காப்பாற்றிய நிலையில் திடீரென அவர் மயக்கமடைந்தார்.

இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அஸ்மிதாவை காப்பாற்ற கடலில் குதித்த போது அவர் அதிகப்படியான கடல் தண்ணீரை குடித்தால் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஒரே இளைஞரை மாறி மாறி இரண்டு இளம்பெண்கள் காதலித்த நிலையில் தற்போது இருவருக்கும் இல்லாமல் அந்த இளைஞர் பரிதாபமாக பலியாகி உள்ளது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

வணிகம்14 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?