இந்தியா
ஒரே இளைஞரை காதலித்த இரு பெண்கள்: சமாதான பேச்சுவார்த்தையில் நடந்த விபரீதம்!
ஒரே இளைஞரை இரண்டு பெண்கள் மாறி மாறி காதலித்த நிலையில் மூவரும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது ஏற்பட்ட விபரீதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜோஸ்வா என்ற இளைஞர் அஸ்மிதா என்பவரை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணமாக இருந்த நிலையில் கடந்த 6 மாதமாக ஜோஸ்வாவுக்கு டாக்லின் என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்த அஸ்மிதா, ஜோஸ்வாவுடன் சண்டை போட்டுள்ளார். இதனை அடுத்து ஜோஸ்வா, அஸ்மிதா, டாக்லின் ஆகிய மூவரும் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சோமேஸ்வரன் என்ற கடற்கரைக்கு சென்றனர்.
அங்கு மூவரும் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மூவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிதடி வரை சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அஸ்மிதா தற்கொலை செய்ய முயற்சித்து கடலில் குதித்து உள்ளார். அவரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஜோஸ்வா கடலில் விழுந்து அவரை காப்பாற்றிய நிலையில் திடீரென அவர் மயக்கமடைந்தார்.
இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அஸ்மிதாவை காப்பாற்ற கடலில் குதித்த போது அவர் அதிகப்படியான கடல் தண்ணீரை குடித்தால் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஒரே இளைஞரை மாறி மாறி இரண்டு இளம்பெண்கள் காதலித்த நிலையில் தற்போது இருவருக்கும் இல்லாமல் அந்த இளைஞர் பரிதாபமாக பலியாகி உள்ளது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.