சினிமா

பாலிவுட் கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் ஜோதிகா?

Published

on

நடிகை ஜோதிகா பாலிவுட் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

தமிழில் ’36 வயதினிலே’ படம் மூலம் கம்பை கொடுத்தார் நடிகை ஜோதிகா. அதற்கு பிறகு ‘ராட்சசி’, ‘மகளிர் மட்டும்’ என கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளை எடுத்து நடித்து வந்தார். இது மட்டுமல்லாது, தயாரிப்பாளராகவும் ‘ஜெய் பீம்’ உள்ளிட்ட படங்களை தயாரித்தார் ஜோதிகா. இந்த நிலையில் அவர் தற்பொழுது மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘காதல் தி கோர்’ என்ற படம் நடித்து முடித்துள்ளார். இதை அடுத்து இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார் ஜோதிகா.

அந்த வகையில், ராஜ்குமார் ராவுடன் ‘ஸ்ரீ’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது மட்டுமல்லாது ‘தாபா கார்டல்’ என்ற இணையத் தொடரிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜோதிகா. இதற்காக, மும்பையில் உள்ள தன்னுடைய வீட்டில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இந்த வெப் தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளிவர இருக்கிறது. சோனாலி போஸ் இயக்கும் இந்தத் தொடரில் பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி, சுஜ்ராவ் ராஜ் உள்ளிட்டப் பலரும் நடிக்கின்றனர். ஐந்து குடும்பப் பெண்களை மையமாகக் கொண்டு இந்த கதை உருவாகி இருக்கிறது. விரைவில் இதன் படப்பிடிப்பும் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version