Connect with us

சினிமா

ஜல்லிக்கட்டு விமர்சனம்… `மனிதன், மகத்தான சல்லிப்பயல்!’ என்பதைச் சொல்ல ஒரு படம்…

Published

on

கறிக்காக கொண்டுவரும் ஒரு எருமை வெட்டுவதற்குமுன் தப்பித்து ஓடுகிறது. தப்பித்து ஓடிய அந்த எருமையைப் பிடிக்க ஒரு கிராமமே கிளம்புகிறது. அந்த எருமையைப் பிடித்தார்களா? கறி ஆக்கினார்களா என்பது தான் இந்த ஜல்லிக்கட்டு.

கேட்கவும் பார்க்கவும் சின்ன கதையாக இருக்கிறது. ஆனால், ஒரு சின்ன கதையை அதன் வாழ்வியலோடு அழகாக சொல்வதுதான் லிஜோ ஜோசின் படமாக்கும் முறை. அப்படித்தான் இந்த ஜல்லிக்கட்டையும் படமாக்கியிருக்கிறார் லிஜோ. படத்தின் ஆரம்பம் முதல் பத்து நிமிடங்கள் வெறும் சத்தங்கள் மூலமே நகர்த்துகிறார். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் வயதானவரின் மூச்சு விடும் சத்தம். இரவில் கேட்டும் வாட்ச் சத்தம், பறவைகள், விலங்குகளின் சத்தம், காலையில் மாட்டுக்கறி வெட்டும் சத்தம் என முழுவதும் சத்தம் அதன் காட்சிகளாகவே நகர்த்துகிறார்.

அங்கமாலி டைரி, இ ம யூ படங்களில் நடித்த ஆண்டனி வர்க்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் இதிலும் நடித்துள்ளார்கள். அதே எதார்த்தமான நடிப்புடன்.

இவ்வளவு தான் கதை என்று தெரிந்தபின் அதை எவ்வளவு சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறோம் என்பதில்தான் மிகப்பெரிய சவாலே இருக்கிறது. அந்த சவாலில் லிஜோ இந்தப் படத்தில் கொஞ்சம் சருக்கியிருக்கிறார். ஒரு கதை அதன் களம் இவற்றை அழகாக காட்டும் லிஜோ அந்தக் கதை இயக்கப்பட்டது தெரியாமலே ரம்மியமாக காட்சி அமைப்புகளின் மூலம் சொல்லி செல்வார். ஆனால், இந்தப் படம் முழுவதும் எருமையை துறத்திக்கொண்டே இருக்க வைத்திருக்கிறார். அது கொஞ்சம் இழுவையாக இருக்கிறது. ஒரு திருப்பமோ, ரசிகனை அடடா என ஆச்சர்யப்படுத்தும் விசயமோ இல்லை. சில நேரங்களில் எப்படா முடியும் என்று ஆகிவிடுகிறது. இத்தனைக்கும் படம் 1.30மணி நேரம் தான்.

இந்தச் சின்னக் கதைகள் மனிதனின் வக்கிரத்தை சொல்லியிருக்கிறார். உண்மையில் மிருகமாக யார் இருக்கிறார்கள். நாகரிகம் அடைந்துவிட்டோம் என்று சொன்னாலும் இன்னும் எவ்வளவு கொடூரங்களை தன் மனத்தில் மனிதன் அதுவும் ஆண் தூக்கிச் சுமக்கின்றான் என்பதையே இந்தப் படம் சொல்ல வருகிறது. அதற்கு எருமை சுற்றுவட்டார கிராம ஆண்களின் ஆண்மையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது அந்த ஒற்றை மிருகம். இதையெல்லாம் சொல்வதற்குள் இந்தப் படம் கொஞ்சம் நம்மை சோதித்து விடுகிறது.

மற்றபடி மலையாள படத்தில் இருக்கும் ஊர் அழகு, மாட்டுக்கறி வாசம், சின்னதாக ஒரு காதல், கொண்டாட்டம் என அத்தனையும் இருக்கிறது. ஒரு கருத்து சொல்லும் படத்தை கொஞ்சம் சத்தத்தை பொறுத்துக்கொண்டு பார்க்கமுடியும் என்றால் இந்தப் படம் உங்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும். மொத்தமாக இல்லை என்றாலும் கொஞ்சமாக ரசிக்க வைக்கிறது இந்த ஜல்லிக்கட்டு… `மனிதன், மகத்தான சல்லிப்பயல்!’ என்ற ஜி.நாகராஜனின் ஒற்றை வரிக்கான படமாகவும் உள்ளது இது…

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?