Connect with us

தமிழ்நாடு

பொதுமக்களை விட பரந்தூர் விமான நிலையம் அவசியமா? எதிர்க்கும் கிராம மக்கள்!

Published

on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் வளத்தூர், நெல்வாய், மடப்புரம், குணகரம்பாக்கம், சிங்கிலி பாடி, மேல்பொடவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம் மற்றும் மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,791 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது.

வாழ்வாதாரம் பாதிப்பு

விமான நிலையம் அமைப்பதனால் ஏகனாபுரம், நாகப்பட்டு, தண்டலம், நெல்வாய் மற்றும் மேலேறி உள்ளிட்ட கிராமங்களில் விவசாய விளை நிலங்கள் மட்டுமின்றி, குடியிருப்புகளும் அகற்றப்பட்டு தங்களின் வாழ்வாதாரமும், முகவரியும் அழிக்கப்படும் என்பதனால் அப்குதியைச் சேர்ந்த பொதுமக்கள் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினந்தோறும் பகல் இரவு நேரங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக 5 கிராம சபை கூட்டங்களிலும், விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளை இழக்கும் ஏகனாபுரம் கிராம மக்கள் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 5 முறை தீர்மானங்களை நிறைவேற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மொட்டை அடித்து போராட்டம்

ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டத்தின் 264 வது நாளான நேற்று ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 100 பேர் மொட்டை அடித்து, நெற்றியில் பட்டை, நாமம் போட்டு கைகளில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து கிராமத்தில் இருக்கும் அம்பேத்கர் சிலை அருகே அமர்ந்து ஒப்பாரி வைத்து, அழுது நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். கிராம மக்களின் போராட்டம் செய்ததனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

வணிகம்22 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?