இந்தியா
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தாக்குதல்: இந்திய மாணவர் உயிரிழப்பு!
உக்ரைன் நாட்டில் உள்ள கார்கீவ் நகரில் ரஷ்ய ராணுவம் தாக்கியதில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் நாட்டை நோக்கி ரஷ்ய ராணுவம் கடந்த 6 நாட்களாக கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உக்ரைன் நாட்டில் உள்ள இந்திய மாணவர் ஒருவர் ரஷ்ய ராணுவ தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உக்ரைனில் உள்ள கார்கீவ் நகரில் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர் ரஷ்யாவின் தாக்குதலில் உயிரிழந்ததாகவும் இது உறுதி செய்யப்பட்ட தகவல் என்றும் அந்த மாணவர்களின் முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
உக்ரைன் நாட்டிலிருந்து இந்திய மாணவ மாணவிகள் மீட்கப்பட்டு தாய் நாட்டிற்கு அழைத்து வரும் நிலையில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.