கிரிக்கெட்

5வது டி20 போட்டியில் குறுக்கிட்ட மழை: ரிசல்ட் என்ன?

Published

on

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று பெங்களூருவில் ஐந்தாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற இருந்தது.

இந்த போட்டியில் டாஸ் போடப்பட்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து இந்திய அணி களம் இறங்கிய நிலையில் இந்திய அணிக்கு அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் விழுந்தன.

இஷான் கிஷான் மற்றும் ஆகியோர் ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.

இதனை அடுத்து 19 ஓவர் கொண்ட போட்டியாக மாற்றப்பட்ட நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டதால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது, இதனை அடுத்து இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது என்பது குறிப்பிடதக்கது.

மழை காரணமாக இன்று போட்டி ரத்து செய்யப்பட்டதால் பெங்களூர் ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version