Connect with us

கிரிக்கெட்

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!

Published

on

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் இப்போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணி தற்போது அறிவிக்கப்ட்டுள்ளது.

டெஸ்ட் அணி அறிவிப்பு

கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணியில், அணியில் அஜிங்கியா ரஹானேவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ரஹானே, டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும் சுப்மான் கில், புஜாரா, கோலி, கே.எல்.ராகுல், கே.எஸ்.பரத், அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

மேலும் அக்சர் படேல், சர்துல் தாக்குர், முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் உள்ளிட்டோரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்திய அளவில் நடைபெறும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட்டிற்கும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இப்போட்டி வருகின்ற ஜூன் மாதம் 7 ஆம் தேதி இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. 17 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?