Connect with us

தமிழ்நாடு

சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை: கொந்தளிக்கும் பாமக தலைவர் அன்புமணி!

Published

on

தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவதையும், சந்துக் கடைகளில் டாஸ்மாக் மது விற்கப்படுவதையும் அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

கள்ளச் சாராயம் விற்பனை

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச் சாராயம் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. கள்ளச் சாராய வணிகர்கள் இடையே நிலவும் போட்டியால், ஒரு பாக்கெட் கள்ளச் சாராயம் வாங்கினால், இன்னொரு பாக்கெட் கள்ளச் சாராயம் இலவசம் மற்றும் இரு பாக்கெட் கள்ளச் சாராயம் வாங்கினால் ஒரு முட்டை இலவசம் என்றெல்லாம் சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக ஆங்கில இதழ் ஒன்று செய்தியை வெளியிட்டு உள்ளது. தடையின்றி கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை அளிக்கிறது.

அன்புமணி ராமதாஸ் கண்டனம்

மது இல்லா மாநிலம் தான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு ஆகும். மதுக் கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கையை கண்டுகொள்ளாத அரசு, பல புதிய வடிவங்களில் மது விற்பனையை அறிமுகம் செய்து வருவது கண்டனத்திற்கு உரியது. சந்துக் கடைகள் என்ற பெயரில் 24 மணி நேரமும் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்யப்படுகிறது.

இத்தகைய சூழலில், கள்ளச் சாராய விற்பனையையும் அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால், நம் நாடு விரைவில் சுடுகாடாக மாறி விடும். இதற்குக் காரணமானவர்களை தமிழ்நாடு அரசு, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். டாஸ்மாக் மதுக் கடைகளை படிப்படியாக மூடி, முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?