Connect with us

இந்தியா

ஐநாவில் இம்ரான்கானை அலறவிட்ட இந்தியாவின் சினேகா; வைரல் வீடியோ!

Published

on

ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியா மீது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி மற்றும் செயலாளருமான சினேகா துபே கொடுத்த பதிலடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐநா சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரையாற்றியபோது, ‘இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியை விரும்புவதாகவும்,ஆனால் அதே நேரத்தில் தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டுமென்றால் காஷ்மீர் விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார்.

இம்ரான் கானின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்த ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி சினேகா துபே, ‘ஒரு கட்டிடத்திற்கு தீ வைத்துவிட்டு அந்த தீயை அணைக்க தீ வைத்தவரே முற்படுவது போல் பாகிஸ்தானின் செயல் உள்ளது என்று கூறியதோடு, பாகிஸ்தான் தொடர்ச்சியாக பயங்கரவாதிகளை ஊக்குவித்து வருகிறது என்றும் இது உலகத்திற்கே பெரும் ஆபத்தாக உள்ளது என்றும் உலக அரங்கில் பொய்யை மட்டுமே பாகிஸ்தான் பரப்பி வருவதாகவும் அந்த பொய்யை அம்பலப்படுத்தும் கடமை அண்டை நாடான எங்கள் நாட்டிற்கு இருக்கிறது என்றும் கூறினார்.

காஷ்மீர் மற்றும் லடாக் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் கூறிய சினேகா துபே, உலகையே அதிர வைத்த அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு தான் பாகிஸ்தான் என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மேலும் பின்லேடன் போன்ற ஒரு நபரை தியாகி போல் சித்தரித்து வரும் பாகிஸ்தான் அமைதியை விரும்புவதாக கூறுவது அப்பட்டமான பொய் என்றும், பாகிஸ்தான் அமைதியை விரும்பினால் முதலில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமரின் குற்றச்சாட்டுக்கு இந்தியாவின் இளம் வெளியுறவுத்துறை அதிகாரி சினேகா துபேயின் இந்த பேச்சு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

மாதம் ரூ.500 முதலீடு செய்தால் ரூ.10 லட்சம் சேமிக்க எவ்வளவு காலம் தேவைப்படும்?

வேலைவாய்ப்பு2 மாதங்கள் ago

ரூ.3,20,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைக்கு அறிவிப்பு வெளியீடு!

வணிகம்2 மாதங்கள் ago

உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்றாலும் கூகுள் பே, போன் பே பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.. எப்படி தெரியுமா?

டிவி3 மாதங்கள் ago

பாக்கியலட்சுமி சீரியல் போல லைசன்ஸ் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

சிறு தொழில்3 மாதங்கள் ago

ரூ.2 லட்சம் முதலீட்டில் மதம் ரூ.80,000 வரை வருமானம் பெற சூப்பர் பிஸ்னஸ் ஐடியா!

தமிழ்நாடு3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

வேலைவாய்ப்பு4 மாதங்கள் ago

ரூ.2,33,919/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 மாதங்கள் ago

இரயில்வே துறையில் வேலைவாய்ப்பு! விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

வேலைவாய்ப்பு4 மாதங்கள் ago

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 2994

தினபலன்4 மாதங்கள் ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (22/08/2023)!