Connect with us

தமிழ்நாடு

பதவியில் இருந்து விலகி விடுவேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்கள் மத்தியில் பேச்சு!

Published

on

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவர்கள் மத்தியில், தான் வகிக்கும் பதவியில் சலிப்பு ஏற்பட்டால் பதவி விலகுவேன் என பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#image_title

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்க காலம் தாழ்த்தியதும், அதனை முதன்முறை ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியதும் தமிழக அரசியல் கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. மேலும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி நிலுவையில் வைத்திருந்தாலே அவை நிராகரிக்கப்பட்டதா அர்த்தம் என ஆளுநர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழக சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.

இந்த சூழலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ராமநாதபுரம் மாவட்டம் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடினார். அப்போது மாணவர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் மொபைல் பொழுதுபோக்கில் நேரம் செலவிடுவதை விட்டுவிட்டு பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும். மனதை ஒழுங்குபடுத்த யேகாசனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், நான் வகிக்கும் பதவியில் எனக்கு எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது பதவியில் இருந்து விலகி விடுவேன் என்றார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?