Connect with us

இந்தியா

எதற்கும் நான் பயப்பட மாட்டேன்: ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு!

Published

on

எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு பிறகு, முதன்முறையாக ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, “நான் எந்தவித மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன்; சிறையில் தள்ளினாலும் அச்சமில்லை” என ஆவேசமாக கூறினார்.

எம்.பி. பதவி பறிப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலாரில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசினார் என குஜராத் மாநிலம், சூரத்தில் இருக்கும் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ராகுல் காந்தியின் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 4 வருடங்கள் கழிந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி, இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு வந்த அடுத்த நாளே (24 ஆம் தேதி) ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமின்றி, பேசுபொருளாகாவும் மாறியது.

பயப்பட மாட்டேன்

பதவி பறிப்புக்கு பின்னர் முதன்முறையாக நேற்று மதியம் டெல்லியில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் ஆவேசமாக, அதானி விவகாரத்தில் என்னுடைய பேச்சால் பிரதமர் மோடி பயந்து போனதால் தான், எனது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில், மத்திய அரசு பீதி அடைந்து, இதில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காகத் தான் இந்த பதவி பறிப்பு நாடகம் அரங்கேற்றப்பட்டு உள்ளது.

நாட்டு மக்களின் ஜனநாயக குரலைப் பாதுகாக்கவே நான் இருக்கிறேன். என்னைத் தகுதி நீக்கம் செய்வதனாலோ, மிரட்டுவதாலோ, சிறையில் அடைப்பதாலோ நான் நின்று விடுவேன் எனவும், அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன உறவு எனக் கேட்பதை நான் றிறுத்தி விடுவேன் எனவும் அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் நான் நிறுத்த மாட்டேன். யாருக்கும் பயப்படவும் மாட்டேன். தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பேன் என ஆவேசமாக பேசினார். எனக்கு ஆதரவாக இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு நன்றி எனவும் தெரிவித்தார்.

வணிகம்5 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?